சதத்தினை பூர்த்தி செய்த குசல் மெண்டிஸ்!

Sunday, August 6th, 2017

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு இடையில் இடம்பெற்று வரும் 2 வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இனிங்சில் தனது 3வது சதத்தினை குசல் மெண்டிஸ் பதிவு செய்துள்ளார். 16 நான்கு ஓட்டங்களுடன் அவர் சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.இந்நிலையில், திமுத் கருணாரத்ன 71 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி கொண்டுள்ளார்.

தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 183 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.இதனையடுத்து, இலங்கை அணியை பொலோவொன் (Follow-on) முறையில் துடுப்பாட இந்திய அணி அழைப்பு விடுத்துள்ளது.முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சார்பில் நிரோஷன் திக்வெல்ல 51 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக பெற்றார்.இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 622 ஓட்டங்கங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியது.இதேவேளை, இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் தமது பாதத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக 2 வார ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: