கிண்ணம் வென்றது கொக்குவில் இந்து!
Thursday, August 9th, 2018இலங்கை கூடைப்பந்தாட்டச் சம்மேளனம் நடத்திய 18 வயதுப்பிரிவு இருபால் அணிகளுக்கும் இடையிலான அணிக்கு மூன்று வீராங்கனைகள் பங்குபற்றும் கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி கிண்ணம் வென்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் கேட்வே கல்லூரி அணியை எதிர்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அணி மோதியது. 12:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்று கிண்ணம் வென்றது.
Related posts:
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்: முரளிதரன்!
இலங்கை ஹொக்கி அணி ஹொங் கொங் பயணம்!
இப்போதும் உறுதியில்லை - இந்திய அணியின் லோகேஷ் ராகுல்!
|
|