கிண்ணத்தை வென்றது  யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி!

Thursday, November 1st, 2018

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 16 வயது பிரிவிற்கு உட்பட்டோருக்கான உதைபந்தாட்டப் போட்டி இலங்கை கல்வி அமைச்சினால் நடத்தப்பட்டது.

இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, குருநாகல் அல் ஹுமர் மத்திய கல்லூரியுடன் மோதி 4:3 என்ற ரீதியில் இவ்வாண்டுக்கான சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

கடந்த மாதம் அநுராதபுரத்தில் நடைபெற்ற கால் இறுதிக்கு முந்திய ஆட்டத்தில் புனித பத்தரிசியார் கல்லூரி அக்கரைப்பற்று  பொத்துவில் மத்திய கல்லூரியை 2:1 என்ற கோல் கணக்கிலும் காலிறுதிப் போட்டியில் கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்தை 3:2 என்ற கோல் கணக்கிலும் அரையிறுதி ஆட்டத்தில் கம்பொல விக்ரமபாகு தேசிய பாடசாலையை 1:0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் இணுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றனர்.

கொ ழும்பில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் குருநாகல் அல் ஹுமர் மத்திய கல்லூரியுடன் மோதிய புனித பத்திரிசியார் கல்லூரி போட்டி நேரத்தின் முடிவில் 2:2 என்ற சமநிலையில் வெற்றி தோல்வியின்றி முடிவைடந்தது. இதையடுத்து சமநிலை தவிர்ப்பு போட்டி நடத்தப்பட்டது. இதில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இவ்வாண்டுக்கான 16 வயதுப் பிரிவின் உதைபந்தாட்ட சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

Related posts: