காற்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Friday, November 25th, 2016

24வயதே ஆகும் பிரேசில் நாட்டின் காற்பந்து வீரரான நெய்மர் உலகளவில் உள்ள தலை சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தற்போது மெஸ்சி, கிறிஸ்டியான ரொனால்டோ ஆகியோருக்கு அடுத்தபடியாக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நெய்மர் பிரேசிலில் உள்ள சான்டோஸ் கிளப்பிற்காக விளையாடினார். அப்போது பிரேசிலை சேர்ந்த DIS என்ற முதலீட்டுக்குழு, நெய்மரின் 40சதவீத பரிமாற்ற உரிமையை (அணியில் இருந்த வேறு அணிக்கு மாறும் உரிமை) வைத்திருந்தது.

இந்த சமயத்தில் பார்சிலோனா அணி சான்டோஸ் அணியிடம் இருந்து சுமார் 57.1மில்லியன் யூரோவிற்கு நெய்மரை வாங்கியது. அப்போது நெய்மரின் குடும்பத்திற்கு 40 மில்லியன் யூரோ கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் நெய்மரின் உண்மையான விலை எவ்வளவு என்பதை இரு கிளப்புகளும் மறைத்து விட்டன. இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று னுஐள ஸ்பெயினில் உள்ள நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக  நெய்மரி;ன் தந்தை நீதிமன்றில் ஆஜராகி முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று தன் வாதத்தை முன்வைத்தார். இதற்கிடையில் வரிஏய்ப்பில் இருந்து தப்பிக்க பார்சிலோனா நிர்வாகம் 5.5மில்லியன் யூரோவை அபராதமாக செலுத்த முன்வந்தது. இதனால் ஸ்பெயின் நீதிபதி ஜோஸ்டி லா மாட்டா இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர முன்வந்தார். அதனால் அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கை தள்ளுபடி செய்யவிடாமல் தொடர்ந்த நடத்த வேண்டும் என்று முறையிட்டார். இந்த வழக்கு தொடர்ந்து நடத்த உத்திரவிடப்பட்டது. இந்த நிலையில் ஸ்பெயின் நீதிபதி ஜோஸ் பொரால்ஸ், பிரேசில் வீரர் நெய்மர் 2 அண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். மேலும் பார்சிலோனா அணியின் முன்னாள் தலைவர் சான்ட்ரோ ரொசல் 5 ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும். இத்துடன் பார்சிலோனா கிளப் 8.4 மில்லியன் யூரோ அபராதமாக விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் ஸ்பெயின் நாட்டின் சட்டத்தின்படி 2ஆண்டுகளோ அல்லது அதற்கு குறைவாகவோ தண்டனை பெற்றால் அந்த தண்டனையை இரத்து செய்ய முடியும் அதனால் நெய்மர் சிறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. வரிஏய்ப்பு வழக்கில் 21 மாதங்கள் தண்டனை பெற்ற மெஸ்சி, இந்த சட்டத்தின்படி சிறைக்குச் செல்லாமல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil_News_11220514775

Related posts: