காபூலில் பாரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!

Tuesday, June 12th, 2018

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 31 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிராமிய புனருத்தாபன மற்றும் அபிவிருத்தி திணைக்களத்தை சேர்ந்த ஊழியர்கள், அலுவலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது.

Related posts: