ஊக்கமருந்துச் சோதனை செய்யாததால் திருப்பி அனுப்பப்பட்டது இலங்கை அணி!
Tuesday, April 24th, 2018இளையோருக்கான ஆசிய பளுதூக்கும் தொடரில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இலங்கை அணி போட்டிகளில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஊக்கமருந்துச் சோதனைகளைச் செய்யாததை அடுத்தே ஊக்கமருந்து தடுப்புச் சம்மேளனத்தால் இந்தத் தடை விதிக்கப்பட்டது.
ஆசிய மட்ட பளுதூக்கும் தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை உஸ்பகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகின்றது. இந்தத் தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்து தமிழ் வீராங்கனை ஆசிகாவை உள்ளடக்கிய அணி சென்றிருந்தது. இந்த அணி போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நேற்றுச்சென்றபோது உரிய ஆவணங்கள் இல்லாதமையால் போட்டியில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஊக்கமருந்துச் சோதனை செய்திருந்த அறிக்கை வைத்திருந்தாலே போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்பது விதி. அது இலங்கை அணியிடம் இல்லாததை அடுத்த வீரர்கள், வீராங்கனைகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இது தொடர்பாக யாழ் பளுதூக்கும் கழக தலைவரும் ஆசிகாவின் பயிற்றுவிப்பாளருமாகிய விஜயபாஸ்கர் கருத்து தெரிவிக்கையில், திறந்த வயதுப் பிரிவினருக்கான ஆசிய மட்டப் போட்டிகளுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் மட்டுமே ஊக்கமருந்து தடுப்புப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஆசிய இளையோருக்கான போட்டியாகவும் ஒலிம்பிக் இளையோருக்கான தெரிவுப் போட்டியாகவும் .
இது அமைந்துள்ளதால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஊக்கமருந்து தடுப்புப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது எமக்குத் தெரியாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் சரியான முறையில் தகவல் வழங்கியிருந்தால் போட்டியில் கலந்து கொண்டிருக்கலாம் என்றார்.
Related posts:
|
|