ஓய்வு அறிவிக்காமல் இருந்திருந்தால் சச்சினை நீக்கியிருப்போம் -சந்தீப் படீல் !

Thursday, September 22nd, 2016

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் படீல் தனியார் தொலைக்க்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- “ கடந்த டிசம்பர் 12, 2012 ஆம் ஆண்டு நாங்கள் (தேர்வுக்குழு) சச்சினை சந்தித்து அவரது எதிர்கால திட்டம் குறித்து கேட்டோம். ஓய்வு பெறும் எண்ணம் தனது மனதில் இல்லை என்று சச்சின் தெரிவித்தார். ஆனால், சச்சினை நீக்குவது என தேர்வுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு இது குறித்து பிசிசிஐக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அடுத்த தேர்வுக்குழு சந்திப்பின் போது என்ன நடைபெறும் என்பதை புரிந்து கொண்ட சச்சின், எங்களை தொடர்பு கொண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓய்வு பெறும் முடிவை சச்சின் அறிவித்திருக்காவிட்டால், நாங்கள் கண்டிப்பாக அவரை நீக்கியிருப்போம்” என்று தெரிவித்தார். ஆனால், சந்தீப் படீல் இணையதளம் ஒன்றிற்கு அளித்த மற்றொரு பேட்டியில், தெண்டுல்கரின் ஓய்வு விவகாரத்தை நிர்வகித்தது எப்படி என்ற விவகரத்தில் சிறிது மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

SachinTendulkar

Related posts: