ஒருபோதும் டில்ஷானை நாம் மறக்க முடியாது-  அமைச்சர் அர்ஜுன ரணதுங்கா!

Friday, August 26th, 2016

திலக்கரட்ன டில்ஷான் போட்டியை மாற்றியமைக்ககூடிய வீரர் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

சர்வதே கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக டில்ஷான் அறிவித்த பொழுதே, அவர் இலங்கை கிரிக்கெட்டிற்கு ஆற்றிய பணியை பாராட்டும் வகையில் அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், திலக்கரட்ன டில்ஷான் விளையாட்டு வீரர் என்ற வகையில் இந்நாட்டிற்கு ஆற்றிய சேவையை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. மத்திய வரிசை துடுப்பாட்டக்காரராக தன்னுடைய விளையாட்டு வாழ்வை ஆரம்பித்தார். அவரொரு சிறந்து பந்து காப்பாளர். அவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரனாகவும் விளையாடினார்.

விளையாட்டு வீரர் என்ற வகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடுவதே மிகவும் கடினமான செயலாகும். அத்தருணத்தில் அவர் சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டார். இவ்வாறான ஒரு செயற்பாட்டினை இணங்கண்டு கொள்வதல்ல வெற்றி, மாறாக இத்துடுப்பாட்ட முறையின் மூலமாக அதிகளவு ஓட்டங்களை பெற்றுக்கொள்ள இயலுமாகவிருந்ததா என்பதே முக்கியமாகும். இக்கோணத்தில் நோக்கும் வகையில் டில்ஷான் விசேஷ திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பந்து வீசும் போது அவர் மிகவும் அறிவுப்பூர்வமாக பந்து வீசுவார்.

அவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர் சிறந்த பந்து காப்பாளராகவும் செயற்பட்டார். எங்கள் நாட்டிற்கு இவ்வாறான வீரர்கள் சொத்துக்கள் ஆவர். டில்ஷான் அணிக்கு ஆற்றிய சேவைகளை வெறும் வார்த்தைகளால் கூறவியலாது. அவராற்றிய சேவையை நான் என்றும் பாராட்டுவேன்.

இவர் எதிர்காலத்தில் கிரிக்கெட் பயிற்சிவிப்பாளராகவோ அல்லது முகாமையாளராகவோ எங்கள் நாட்டு கிரிக்கெட்டிற்கு தன்னுடைய சேவையை தொடருவார் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts: