ஐ.பி.எல். போட்டியிலிருந்து ராகுல் வெளியேற்றம்!

Saturday, April 1st, 2017

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தற்போது கலக்கி வரும் கே.எல்.ராகுல், இந்த வருடம் இடம்பெறவுள்ள 10 ஆவது ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களுக்கு முன்னர் நடந்த கவாஸ்கர் கிண்ண தொடரின் போது தோற்பட்டையில் காயம் ஏற்பட்டது.இருப்பினும் ஆஸிக்கெதிரான தொடரில் விளையாடி பல சாதனைகளை படைத்து தரவரிசையில் முன்னேற்றமும் கண்டுள்ளார்.

இந்நிலையில் 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் எனவும், லண்டன் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு இந்திய அணி மற்றும் பெங்களூரு அணித்தலைவராக விராட் கோஹ்லி ஏற்கனவே உபாதையால் ஆரம்ப போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ராகுலின் முடிவால் தற்போது பெங்களூரு அணியின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. அத்துடன், குறித்த போட்டியில் பெங்களூரு அணித் தலைவராக டி வில்லியர்ஸ் செயற்படுவார் என பெங்களூரு நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: