ஐசிசியின் முன்னாள் நடுவர் அசாத் ரவூப் காலமானார்!
Thursday, September 15th, 2022
2006 முதல் 2013 வரை ஐசிசி எலைட் பேனலில் அங்கம் வகித்த பாகிஸ்தானின் முன்னாள் நடுவர் அசாத் ரவுஃப், லாகூரில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்..
நடுவர் அசாத் ரவுஃப் தனது 66 ஆவது வயதில் காலமானார்.
2000 ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியிலும் ரவுஃப் நடுவராக இருந்தார்.
2006 ஆம் ஆண்டில், ஐசிசியின் எலைட் பேனலில் அவர் பெயரிடப்பட்டார், அவர் 2013 வரை அங்கம் வகித்தார்.
அவர் 64 டெஸ்ட் போட்டிகள், 139 ஒருநாள் போட்டிகள், 28 டி 20 போட்டிகள் மற்றும் 11 பெண்கள் டி20 போட்டிகளின் நடுவராக அல்லது டிவி நடுவராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உதைபந்தாட்டம்: வதிரி டயமன்ஸ் இறுதிக்கு சென்றது!
BPL இருபதுக்கு இருபது தொடர் - திசர பெரேரா அதிரடி!
6 ஓட்டங்கள் கொடுத்தது தவறு தான் – தர்மசேனா!
|
|
|


