என்னிடம் லைசன்ஸ் இல்லை அதனால் மோட்டார் சைக்கிள் வேண்டாம் – அசாம்!

Sunday, April 8th, 2018

பாகிஸ்தான் மண்ணில் மூன்று இருபது-20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி பங்கேற்றிருந்தது.

இதில் 3 போட்டிகளையும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த தொடரில் 3 போட்டிகளில் 197 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தொடர் நாயகன் விருதை வென்றார்.

அவருக்கு பரிசாக மோட்டார் சைக்கிள் ஒன்று வழங்கப்பட்டது. பின்னர் பேசிய பாபர் அசாம், இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடியது மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

என்னிடம் லைசன்ஸ் இல்லை என்பதால் இந்த பைக்கை என்னால் இங்கிருந்து லாகூருக்கு எடுத்து செல்ல முடியாது என வேடிக்கையாக கூறினார். மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமைக்கு நன்றி என்றும் மற்ற அணிகளையும் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் பாபர் அசாம்.

Related posts: