உலக கிண்ணத் தகுதியை இழந்தது இத்தாலி!

Tuesday, November 14th, 2017

4 முறை கிண்ணம் வென்ற இத்தாலி அணி, காற்பந்து உலக கிண்ணத் தொடருக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

சுவீடனுக்கு எதிரான தகுதிகாண் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. அந்த அணியுடனான முதல்போட்டியில் தோல்வியுற்றிருந்த இத்தாலி மொத்தப் பெறுபேற்றின் அடிப்படையில் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

1958ம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக இத்தாலி அணி உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கிறது. இதன்மூலம் சுவீடன் அணி உலக கிண்ணத் தொடருக்கு தகுதிப் பெற்றுள்ளது.

Related posts: