32வது தேவிய பாடசாலைகள் விளையாட்டு விழா: மேல் மாகாணம் முதலிடம்!
Wednesday, October 19th, 2016
32 வது இலங்கைப் பாடசாலைகள் தேசிய விளையாட்டு விழாவில் பெண்கள் பிரிவில் வத்துகாமம் கல்வி வலயத்தைச் சேர்ந்த வலல ஏ.ரத்நாயக்க மத்திய கல்லூரியும் அண்கள் பிரிவில் மேரிஸ்டெல்லா கல்லூரியும் சம்பியன்களாக தெரிவாகின.
கண்டி போகம்பறை மைதானத்தில் நிறைவடைந்த மேற்படி போட்டியின் பரிசளிப்பு வைபவத்தில் முஸ்லிம் சமய விவகார தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பிரதம அதிதியாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் கௌரவ அதிதகளாகவும் கலந்து பரிசில்களை வழங்கினர்.
பெண்கள் பிரிவில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த வலல ஏ.இரத்நாயக்க மத்திய கல்லூரி 14 வது வருடமாகவும் சம்பியனாகியது. மொத்தம் 150 புள்ளிகளை அதுபெற்றிருந்தது. அதேநேரம் ஆண்கள் பிரிவில் மேரிஸ்டெலா கல்லூரி 100 புள்ளிகளைப் பெற்று ஆண்கள் பிரிவில் சம்பியனானது.
மாகாண அடிப்படையில் மேல் மாகாணம் மொத்தம் 855 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் மத்திய மாகாணம் 492 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
அதிதிகள் பரிசு வழங்குவதையும் அணிநடை பவணியையும்ஏற்றுக் கொள்வதையும் உடற்பயிற்சிக் கண்காட்சியையும் காணலாம்.
Related posts:
|
|