உலகக் கிண்ணம் வரை சுமதிபாலவே தலைவர்!

Sunday, August 20th, 2017

2019ஆம் ஆண்டுவரை இலங்கை கிரிக்­கெட் சபை­யின் தலை­வ­ராக நானே இருப்­பேன். அதில் எந்த மாற் ற­மும் இல்லைஎன்று  சும­தி­பால தெரி­வித்துள்ளார்.

இந்­திய அணிக்கு எதி­ராக இலங்கை அணி 0:3 என்ற அடிப் ப­டை­யில் டெஸ்ட் தொடரை இழந்­துள்­ளது. இத­னால் இலங்கை அணி மீதும் இலங்கை கிரிக்­கெட் சபை மீதும் ஏகப்­பட்ட குற்­றச் சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. குறிப்­பாக இலங்கை அணி­யின் முன்­னாள் தலை­வர் ரண­துங்க, ‘‘இந்­தத் தோல்­வி­யில் எந்த ஒரு வீர­ருக்­கும் பங்­கில்லை.

கிரிக்­கெட் சபை­யின் நிர்­வா­கத்­தின் பொறுப்­பேற்று தத்­த­மது பத­வி­யில் இருந்து விலக வேண்­டும்’’ என்று தெரி­வித்­தார். இதை­ய­டுத்து நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் உரை­யாற்­று­கை­யி­லேயே சும­தி­பால இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘இலங்கை கிரிக்­கெட் அணி தொடர்ச்­சி­யாக அடைந்து வரும் மோச­மான தோல்­வி­க­ளுக்­காக நான் பதவி வில­கு­வ­தற்­கான எந்த எண்­ண­மும் இல்லை. எக்­கா­ர­ணம் கொண்­டும் எனது பொறுப்­பு­க­ளி­லி­ருந்­தும் இலங்கை கிரிக்­கெட் சபை­யில் இருந்­தும் 2019ஆம் ஆண்டு உல­கக்­கிண்­ணம்­வரை வில­க­மாட்­டேன்’’ என சும­தி­பால மேலும் தெரி­வித்­தார்.

இலங்கை கிரிக்­கெட் சபைக்­கான தேர்­த­லில் ரண­துங்­க­வும் போட்­டி­யிட்­டார். அதில் அவர் தோல்­வி­ய­டைந்­தார். இத­னா­லேயே அவர் இலங்கை கிரிக்­கெட் சபை­யின் மீதும், இலங்கை அணி­யின் வீரர்­கள் மீதும் தொடர்ந்து விமர்­ச­னங் களை முன்­வைத்து வரு­கி­றார் என் றும் கருத்­துக்­கள் உள்ளன.

Related posts: