இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அதிரடி அறிவிப்பு!
Saturday, February 11th, 2017இலங்கையில் கிரிக்கெட் மைதானத்தின் ஊழியர்கள் நடத்திவரும் போராட்டத்தையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்க சுமதிபாலா அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் அமைந்திருக்கும் Dambulla கிரிக்கெட் மைதானத்தின் ஊழியர்கள் சில நாட்களாக தங்கள் பணி சம்மந்தமாக கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் திலங்க சுமதிபாலா கூறுகையில், இலங்கையின் மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுடன் இணக்கமாக ஊழியர்கள் இருந்தால் அவர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும்.
தற்போது இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் மைதான ஊழியர்கள் மாநிலங்கள் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கங்கள் அளவுக்கு அவர்கள் பணி விரிவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, தொழிலாளர் சட்டத்தின் படி ஊழியர் சேமலாப நிதியம் போன்ற விடயங்களும் இனி சேர்க்கப்படும் எனவும் சுமதிபாலா கூறியுள்ளார்.
உண்ணாவிரதம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டு வரும் Dambulla மைதான ஊழியர்களுக்கு இலங்கையில் உள்ள மற்ற மைதான ஊழியர்களும் ஆதரவளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|