இறுதிப் போட்டியில் விளையாட பார்சிலோனா அணி தகுதி!

Thursday, February 9th, 2017

ஸ்பெயினில் நடைபெற்று வரும் கோபா டெல் ரே கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட பார்சிலோனா அணி தகுதி பெற்றுள்ளது..

அரை இறுதியில் அத்லெடிகோ மாட்ரிட் அணியுடன் மோதிய அந்த அணி, முதல் கட்ட ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று முன்னிலை பெற்றது. கேம்ப் நோ மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2வது கட்ட ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

பார்சிலோனா சார்பில் முன்னணி வீரர் லூயிஸ் சுவாரெஸ் 43வது நிமிடத்தில் கோல் போட்டார். அத்லெடிகோ வீரர் கேமிரோ 83வது நிமிடத்தில் கோல் அடித்தார். இரு அணி வீரர்களும் பல கோல் வாய்ப்புகளை நழுவவிட்டனர். லியோனல் மெஸ்ஸி அடித்த பிரீ கிக் துரதிர்ஷ்டவசமாக கோல் கம்பத்தில் பட்டு வெளியே பறந்தது. மொத்த கோல் அடிப்படையில் 3-2 என்ற கணக்கில் வென்ற பார்சிலோனா பைனலுக்கு முன்னேறியது. அலாவெஸ் – செல்டோ விகோ அணிகளிடையே நடைபெறும் அரை இறுதியில் வெற்றி பெறும் அணியுடன் பார்சிலோனா இறுதிப் போட்டியில் மோதும்.

Daily_News_9222332239152

Related posts: