இந்திய அணி டி.ஆர்.எஸ் முறையை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்: கங்குலி!

Sunday, March 5th, 2017

பெங்களூரில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டி.ஆர்.எஸ் முறையை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் அணித்தலைவர் கங்குலி இந்திய அணியை கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து கங்குலி மேலும் தெரிவிக்கையில், ‘ புனேயில் நடைபெற்ற அவுஸ்ரேலிய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்களால் தோல்வியடைந்த இந்திய அணி டி.ஆர்.எஸ் முறையை சரியாக பயன்படுத்தவில்லை. இந்திய அணி கடந்த 10 ஆண்டுகள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் அதே நிலையை அடைவதற்கு கடினமாக விளையாட வேண்டும்.

இந்திய அணி சொந்த மண்ணில் தோற்றதை போன்று, ஏராளமான அணிகளும் தோல்வியை சந்தித்துள்ளன. அனைத்து வகையில் சிறந்த முறையில் செயற்படுவதற்கு சிறிது ஓய்வு தேவை. பெங்களூரில் இந்திய அணி மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்பும். நாம் சிறந்த அணி என்பதை இந்தியா நம்ப வேண்டும். இந்திய அணி டி.ஆர்.எஸ். முறையை இன்னும் சிறப்பான முறையில் பயன்படுத்துவது மிகவும் அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts: