இந்திய அணி வெற்றி !
Monday, February 26th, 2018
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி ஏழு ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தீர்மானித்தது. முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.பதிலளித்தாடிய 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் 2 போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
Related posts:
ஒலிம்பிக் வாகனம் யாழ் குடாநாட்டில் பவனி!
சர்வதேச கிரிக்கட் பேரவை அதிரடி: இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் கிரிக்கெற் நிர்வாகங்கள் திணறல்!
இலங்கை – ரஷ்யா இடையில் விளையாட்டுத்துறையில் பங்களிப்புக்களைபலப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் நாமலின் ...
|
|