இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கட் தொடர் குறித்து இணக்கம்!

Wednesday, May 31st, 2017

இந்தியாவுக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கட் தொடர் ஒன்றை ஒழுங்கு செய்வது குறித்த வாய்ப்புகளை ஆராய இரண்டு நாடுகளும் இணங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தான் கிரக்கட் சபையின் தலைவர் சஹாரியார் கான் இதனைத் தெரிவித்துள்ளார் டுபாயில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகளை சந்தித்தப் பின்னர் அவர் இந்த கருத்தை வெளயிட்டுள்ளார்

இதன்படி இலங்கையில் அடுத்த ஆண்டு இந்தியா, பாகிஸ்தானுடன் மேலும் ஒரு அணியை அல்லது இரண்டு அணிகளை இணைந்து மும்முனை அல்லது சதுர்முனைப் போட்டித் தொடரை நடத்தும் வாய்ப்பு குறித்து ஆராயப்படுகிறது

எனினும் இந்த தொடரை நடத்த வாய்ப்புகள் இருந்த போதிலும், அடுத்த ஆண்டு இந்திய பாகிஸ்தானுக்கு இடையிலான ராஜதந்திர தொடர்புகள் எவ்வாறு இருக்கும்? என்பது தொடர்பில் அவதானத்தில் கொள்ளப்பட்டே தீர்மானம் எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கட் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Related posts: