இந்தியா  தொடர்பான அவதூறு: வருத்தம் தெரிவித்த வீரர்!

Tuesday, August 15th, 2017

 

இந்தியா பற்றி சர்ச்சைக்குரிய கருத்தினைக் கூறியதற்காக தாம் மிகவும் வருந்துவதாக அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கெவின் துரந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருந்த கெவின் அதன் பின்னர் அமெரிக்க ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போது, இந்தியாவில் தகுதி அற்ற பலர் கூடைப்பந்தாட்டத்தை கற்க விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அறிவு மற்றும் அனுபவத்தில் 20 ஆண்டுகள் இந்தியா பின்தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்ட கெவின், மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் இந்தியாவில் நிறைந்து காணப்படுவதாகவும் கூறியிருந்தார்.

அதன் பின்னர் கெவினின் குறித்த கருத்துகளுக்கு பல்வேறு விமர்சனங்களும், எதிர்ப்புகளும் வௌிப்படுத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக கெவின் தனது டுவிட்டர் மூலமாக தான் தேவையற்ற விடயங்களைப் பேசி விட்டதாகவும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கருத்தினை பதிவு செய்துள்ளார்.

Related posts: