இந்தியத் தொடர் சவால் மிக்கதாக இருக்கும் – மைக்கல் கிளார்க்!

Friday, August 18th, 2017

இந்திய அணிக்கு எதிராக அடுத்த மாதம் ஆரம்பமாகின்ற கிரிக்கட் தொடர், அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் சவால் மிக்கதாக இருக்கும் என்று, அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்செப்டம்பர் ஒக்டோபர் மாதங்களில் ஐந்து ஒருநாள் மற்றும் 3, 20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய அணி இந்தியா செல்லவுள்ளது.

இந்திய அணி தற்போது பலமாக உள்ள நிலையில், இந்த தொடர் அவுஸ்திரேலியாவுக்கு இலகுவாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், இந்திய அணித் தலைவர் விரோட் கோஹ்லி, மிகச்சிறந்த வீரர் என்றும், அவரும் ஒரு அவுஸ்திரேலியரைக் காண்பதாகவும் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

காலாகாலமாக அவுஸ்திரேலிய வீரர்கள் கிரிக்கட் போட்டிகளில் பின்பற்றிவந்த நுட்பங்கள் மற்றும் மனநிலையுடனேயே விராட் கோஹ்லி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: