இங்கிலாந்தை அதிர வைத்த இலங்கை அணி!

Saturday, June 22nd, 2019

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி, 20 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

லீட்ஸில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இதையடுத்து, 233 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 47 ஓவர்களில் 212 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில், லசித் மலிங்க அதிக விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

10 ஓவர்களில் 43 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை அவர் கைப்பற்றியிருந்தார்.

இதனூடாக, லசித் மலிங்க, உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் 50 விக்கட்டுக்களைக் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் நான்காவது வீரராக இணைந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் க்ளென் மெக்ராத், இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் பாகிஸ்தானின் வஸிம் அக்ரம் ஆகியோர் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக இலங்கை அணி, உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணி, 8 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: