இங்கிலாந்து அணியுடன் இணையும் ஜெயவர்த்தன!

Saturday, June 29th, 2019

இலங்கை ஜம்பவான் மஹேல ஜெயவர்த்தன, இங்கிலாந்து உள்ளூர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் ஆணையம் இணைந்து, புதிதாக 100 பந்து கிரிக்கெட் லீக் தொடரை நடத்த உள்ளனர். இத்தொடர் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு யூலை மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில், சவுத்தாம்ப்டன் சேர்ந்த Southern Brave அணி உட்பட 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில், Southern Brave அணியின் பயிற்சியாளராக இலங்கை ஜம்பவான் மஹேல ஜெயவர்த்தன பொறுப்பேற்க உள்ளதாகவும், இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயவர்த்தன, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியாளராகவும், வங்கதேச லீக்கில் குல்னா டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெயவர்த்தன உதவியாளராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷேன் பாண்ட் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜெயவர்த்தன உடன் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான சம்பளம் 65,000 பவுண்டு என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts: