35 ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் இல்லாத நகரம்!

Wednesday, November 23rd, 2016

இத்தாலியில் பெனவென்றோ மாகாணத்தில் உள்ள ஒரு நகரந்தான் பொதுமக்களால் கைவிடப்பட்ட நிலையில் பேய்வீடு போன்று காட்சி அளிக்கிறது.

கடந்த 1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட Irpinia நிலநடுக்கத்தை அடுத்து அங்கு குடியிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நகரை மொத்தமாக காலி செய்துவிட்டு உயிர் தப்பினர்.

அதன் பின்னர் இதுவரை கடந்த 35 ஆண்டுகளாக அவர்கள் இங்கு குடியிருக்கும் நோக்கில் வந்ததில்லை என்று கூறப்படுகிறது. தற்போது குறித்த நகரம் சிறுகச் சிறுக பொதுமக்களால் உயிர் பெற்று வருவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாவுக்கு பெயர்போன குறித்த நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,500 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். பெரும்பாலான கட்டிடங்கள் மொத்தமாக சேதமடைந்தன. மறுபடியும் வந்து குடியிருக்கும் எண்ணம் அங்குள்ள குடிமக்களுக்கு வராததன் முக்கிய காரணமாக கருதப்படுவது பீதியே என கூறப்படுகிறது.

மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் தங்களின் வாழ்வாதாரம் மொத்தமும் மீண்டும் சீர்குலையலாம் என்ற அச்ச உணர்வே இதுவரை குறித்த நகரில் மக்கள் குடியேற மறுத்து வந்ததன் காரணமாக கருதப்படுகிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: