லண்டனில் பொப்பி மலர் கண்காட்சி மகாராணியாரால் அங்குரார்ப்பணம்!

Wednesday, May 25th, 2016

இலண்­டனில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மான செல்ஸி மலர் கண்­காட்­சி­யில் பல்லாயிரக்கணக்­கான கைகளால் தயா­ரிக்­கப்­பட்ட பொப்பி மலர்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன

மேற்­படி கண்­காட்­சி­யா­னது பிரித்­தா­னிய எலி­ஸபெத் மகா­ரா­ணி­யாரால் அங்­கு­ரார்ப்­பணம் செய்து வைக்­கப்­பட்­டது. இந்தக் கண்­காட்­சி­யை­யொட்டி லண்­டனின் ரோயல் மருத்­து­வ­ம­னைக்கு முன்­பாக 300,000 சிவப்பு பொப்பி மலர்­களை உள்­ள­டக்­கிய இராட்­சத செங்­கம்­பள விரிப்பு விரிக்­கப்­பட்­டது

அதே­ச­மயம் இந்தக் கண்­காட்சியை முன்னிட்டு லண் டன் கோபு­ரத்தைச் சுற்றி பீங்­கானால் தயாரிக்கப்­பட்ட சுமார் 900,000 பொப்பி மலர்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட் டன

அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த வடி­வ­மைப்­பா­ளர்க­ளான பிலிப் ஜோன்ஸன் மற்றும் அதே நாட்டைச் சேர்ந்த லைன் பெரி மற்றும் மார்க்­கரெட் நைட் ஆகி­யோ ரால் இந்தக் காட்­சி­ய­லங்­காரம் வடிவமைக்கப்­பட்­டி­ருந் ­தமை குறிப்­பி­டத்­தக்­கது. தைக்­கப்­பட்ட பொப்பி மலர் ­களை உள்ளடக்கிய விரிப்பு எதிர்வரும் 28 ஆம் திகதிக் குப் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப் படவுள்ளது

Untitled-5 copy

Untitled-4 copy

Related posts: