மின்னல் தாக்கி களஞ்சியம் தீக்கிரை!

Monday, August 1st, 2016
சுவிட்சர்லாந்தில் மின்னல் தாக்கியதால் Henniez பகுதியில் அமைந்துள்ள தானியக் களஞ்சியம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Henniez பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. தானியக் களஞ்சியம் தீக்கிரையான சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் vaud பொலிசார், சம்பத்தை தொடர்ந்து இதுவரை எவரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகவில்லை என்றனர்.

ஆனால் இச்சம்பவத்தால் மாலை வெகு நேரமாகியும் சாலை போக்குவரத்து சீராகவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். பேர்ண் நோக்கி செல்லும் சாலைகள் எதுவும் நெரிசலில் சிக்கவில்லை என்றபோதும் அந்த பகுதியில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

வாகன ஓட்டிகளில் சிலர் தானியக் களஞ்சியம் மீது மின்னல் தாக்குவதை நேரில் பார்த்துள்ளனர். மட்டுமின்றி கண்ணை கூசும் வெட்டத்துடன் வெடித்துச் சிதறுவதையும் பொதுமக்கள் கண்டுள்ளனர்.புயலால் ஏற்கனவே அப்பகுதி அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தானியக் களஞ்சியம் மீது மின்னல் தாக்கி தீக்கிரையாகியுள்ளது.

சுற்றுவட்டாரப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.மின்னல் தாக்கியதை அடுத்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் ஆராவ் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீக்கிரையான சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Related posts: