மிகவும் சலிப்பான வேலையை கொடுத்த நிறுவன உரிமையாளரிடம் இழப்பீடு கோரி ஊழியர் ஒருவர் வழக்கு பதிவு!

Sunday, May 8th, 2016

மிகவும் சலிப்பான வேலையைத் தனக்குக் கொடுத்த நிறுவன உரிமையாளரிடம் இழப்பீடு கோரி, ஊழியர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பிரான்சைச் சேர்ந்த பாரிசியன் டெஸ்னார்ட் என்பவர், அவர் வேலை பார்த்த இன்டெர்பார்பம்ஸ் என்ற நிறுவனம் சலிப்பு தரும் வேலையை அவருக்கு வழங்கியதால், ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகளுக்காக 2.7 கோடி ரூபா இழப்பீடு வழங்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இன்டெர்பார்பம்ஸ் நிறுவனத்தில் கடந்த 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த டெஸ்னார்ட், இதனால் மன ரீதியாக மிகவும் அழுத்தத்துக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு பாரிஸில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையம் முன்பாக விசாரணைக்கு வரும் என்றும், இந்த வழக்கில் தீர்ப்பு ஜூலை மாதம் இறுதியில் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: