சங்கத் தமிழர்களின் உறை கிணறு கண்டுபிடிப்பு!

Friday, September 16th, 2016

மட்டக்களப்பு வந்தாறுமூலையின் பிரதான வீதியின் 300 மீற்றர் தூரத்தில் மேற்கு திசையாக  உள்ள  வயற்கரையில் விவசாயிகளினால் கிணறு வெட்டும் போதுசுடு மண்ணினால் உருவாக்கப்பட்ட கிணறு ஒன்று கண்டு பிடிப்பிடிக்கப்பட்டது.

இதனை வரலாற்றுத்துறை போராசிரியர் சி.பத்மநாதன், போராசிரியரின் தொல்லியல் ஆய்வுக்குழு உறுப்பினரும் ஆசியருமான செ.பத்மநாதன் நேரடியாக கள ஆய்வுகளைக் மேற்கொண்டு இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சான்றுகளைக் ஆய்வு செய்து அடையாளப்படுத்தியதோடு இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சான்றுகளில் காணப்படும் நாகன் எனும் வரிவடிவம் தமிழ்மொழி எனவும் அவற்றின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குரியது எனவும் கூறியதோடு ஆதிகாலம் முதல் தென்னிந்தியாவின் சோழ மண்டல கடற்கரையிலுள்ள காவிரி பூம்பட்டிணம் போன்ற
துறைமுக் பட்டிணம் மூலமாக மட்டக்களப்பு தேசத்திற்கு கடல் வழிமார்க்கமாக குடியேறிய காவிரி சோழர்கள் வந்தாறுமூலை, மாவெடிவெம்பு, சித்தண்டி, ஈரளக்குளம், படிவெட்டியமலை, வேகரம், வேரம், ஓடியமலை போன்ற பிரதேசங்களில் குடியேறியதோடு இங்கு வாழ்ந்த நாகர்களுடன் தமது பண்பாட்டையும் இணைத்துக் கொண்டனர்.

தென்னிந்தியாவில் உறையூர் அரிக்கன்மேடு பூம்பூகார் விழுபுரம் போன்ற இடங்களில் சங்க காலத்தும்குரிய அடுக்கு உறை கிணறுகள் கண்டுபிடிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: