கொடூரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவம்: சான்றாக விளங்கும் அரிய பதிவு!

Friday, February 23rd, 2018

தற்போதைய மருத்துவ முறைகள் பெருமளவில் வளர்ச்சியடைந்துள்ளதனால் இலகுவாகவும், எளிமையானதாகவும் இருக்கின்றன.

நோயாளிகளுக்கு அதிக அளவில் வலியை ஏற்படுத்தாமல் சிகிச்சை அளிக்க ஏதுவாகவும் உள்ளது.ஆனால் ஆரம்ப காலங்களில் கொடூரமான முறைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் முகமாக அரிய வகை புத்தகம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.இப் புத்தகத்தில் 16ம் நூற்றாண்டில் மருத்துவ சிகிச்சைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் உள்ளடங்கியுள்ளது.

இதில் கூரிய ஆயுதங்கள் மூலம் உடலின் பகுதிகளை தாக்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தமை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.இப் புத்தகமானது அண்மையில் நியூயோர்க் அக்கடமியின் மருத்துவத்துறை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: