கண்களை கவரும் அசாதாரண பாரிய பனிப்பாறை!

Thursday, April 20th, 2017

நியுபவுன்லாந்தின் தென் கரையோர நெடுஞ்சாலை பூராகவும் போக்குவரத்து தடைப்பட்டது. காரணம் அசாதாரணமான பனிப்பாறை ஆழமற்ற நீரில் சிக்கி மிதந்த காட்சி. நியு பவுன்லாந்தில் அவலொன் தீபகற்பத்தில் வெறிலான்ட் கரையில் இக்காட்சி தோன்றியுள்ளது.

ஈஸ்டர் நீண்ட வார இறுதி தொடக்கம் மக்கள் கூட்டம் சொரிந்த வண்ணம் இருந்ததென கூறப்படுகின்றது.பனிப்பாறையின் அதி உச்சரம் தோராயமாக 46மீற்றர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது.பனிப்பாறை சற்று நகர்ந்து உடைந்துள்ள போதிலும் அவ்விடத்தை விட்டு விரைவில் அகலும் என தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Related posts: