இலங்கை ஆழ்கடலில் அதிசய கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

Thursday, January 18th, 2018

இலங்கைக்கு அண்மித்த பகுதியில் கடல் தொல்பொருளியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் மதிப்பு கொண்ட ‘RMS RANGOON’என்ற கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீராவி சக்தியில் இயங்கும் பிரித்தானிய ரோயல் தபால் சேவைக்காக பயன்படுத்தப்பட்ட இந்த கப்பல் 1871 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி காலி கடலில்மூழ்கியதாக கூறப்படுகின்றது.

இந்த கப்பல் ROYAL MAIL SHIP’ என்பதனை குறிக்கும் வகையிலேயே ‘RMS’ என அழைக்கப்படுகின்றது. காலி துறைமுகத்திற்கு ஏழு கடல் மைல்கள் தொலைவில் 30 மீற்றர்ஆழ் கடலில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் பல முக்கிய பாகங்கள் மத்திய கலாச்சார நிதியினால் மேற்கொள்ளப்பட்ட கடல் ஆய்வின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts: