ஆள் இல்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் தனியார் நிறுவனம்!

Sunday, May 1st, 2016
பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

இந்தியாவு ‘மங்கள்யான்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் களம் இறக்கி உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கியுள்ளது.

இந்த நிலையில் 2018-ம் ஆண்டில் செவ் வாய் கிரகத்துக்கு அமெரிக்க தனியார் விண்கலம் பயணமாகிறது.செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆய்வு மேற் கொண்டு வருகின்றன.

வருகிற 2030-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப போவதாக நாசா அறிவித்துள்ளது.அதே நேரத்தில் அங்கு ஆட்களை குடியமர்த்த போவதாக அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கு முன்னோடியாக வருகிற 2018-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் யாரும் இல்லாத விண்கலத்தை இந்நிறுவனம் அனுப்புகிறது. இத்தகவலை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ கம்பெனியின் நிறுவனமும் தலைமை செயல் அதிகா ரியுமான எலான் முஸ்ன் அறிவித்துள்ளார்.

‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் கலிபோர்னியாவில் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ‘ரெட் டிராகன்’ என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் ராக்கெட் மூலம் இது அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலத்தை வடிவமைக்க ஒத்துழைப்பு அளிப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

தற்போது ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வகம் மற்றும் வீரர்களுக்கு தேவையான பொருட்களும், உணவும் அனுப்பபட்டு வருகின்றன.  அடுத்த ஆண்டு (2017) இறுதியில் சர்வ தேச விண்வெளி ஆய்வகத் துக்கு ஆட்களை அனுப்ப இருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது.

Related posts: