மனி­தர்கள் புதிய இன­மாக கூர்ப்­ப­டை­யலாம் – எச்சரிக்கும் விஞ்­ஞா­னிகள் !

Thursday, March 16th, 2017

அமெ­ரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலை­ய­மா­னது எதிர்­வரும் 2030  ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்திற்கு மனி­தர்­களை அனுப்பத் திட்­ட­மிட்டு அதற்­கான பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­களை ஆரம்பித்­துள்­ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

செவ்வாய்க்கிர­கத்தில் எதிர்­கா­லத்தில் மனி­தர்கள் குடி­யேறும் பட்­சத்தில்  அவர்கள் அந்தக் கிரகத்திலான  நிலை­மை­க­ளுக்கு இசை­வாக்­க­ம­டைந்து  உடல் மற்றும் மன ரீதி­யான மாற்றங்களுக்குள்­ளாகி   ஒருநாள்  அவர்கள் புதிய இன­மாக கூர்ப்­ப­டை­யலாம்  என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மனி­தர்கள்  செவ்­வாய்க்­கி­ர­கத்தை சென்­ற­டையும் போது அங்­குள்ள  முற்­றிலும் வித்­தி­யா­ச­மான கால­நிலை  கார­ண­மாக அதிவேக­மான கூர்ப்பு நிலை மாற்­றங்­க­ளுக்­குள்­ளாகி  புதிய இன­மாக மாற்ற­ம­டை­யலாம்  என அவர்கள் கூறு­கின்­றனர்.

இது தொடர்பில் மேற்­படி ஆய்வில் பங்­கேற்ற போலந்தில் ரஸெஸ்ஸோவ் எனும் இடத்­தி­லுள்ள தகவல் தொழில்­நுட்ப முகா­மைத்­துவ பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­யான கொன்ராட் ஸொசிக் விப­ரிக்­கையில்,

செவ்­வாய்க்­கி­ர­கத்­துக்குச் செல்லும் விண்­வெ­ளி­வீ­ரர்கள்  தமது பய­ணத்தை வெற்­றி­க­ர­மாக மேற்கொள்ள  அவர்­க­ளுக்கு  உணர்­வு­நி­லையை விரி­வு­ப­டுத்த இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­களும் சோர்­வான நிலை­மையை  போக்க மருந்­து­களும்  ஏனைய உணர்வு ரீதி­யான வச­தி­களும் தேவைப்படலாம் எனத் தெரி­வித்தார். இந்­நி­லையில் செவ்­வாய்க்­கி­ர­கத்தில் மனி­தர்கள் தொடர்ந்து தங்­கி­யி­ருக்கும் பட்சத்தில் அவர்கள் புதிய இனமாக கூர்ப்படைவது தவிர்க்க முடியாது என  இந்த ஆய்வில் பங்கேற்ற கூர்ப்பு தொடர்பான உயிரியல் நிபுணரான கலாநிதி ஸ்கொட்  சோலோமான் கூறுகிறார்.

Related posts: