மனிதர்கள் புதிய இனமாக கூர்ப்படையலாம் – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !
Thursday, March 16th, 2017அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டு அதற்கான பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
செவ்வாய்க்கிரகத்தில் எதிர்காலத்தில் மனிதர்கள் குடியேறும் பட்சத்தில் அவர்கள் அந்தக் கிரகத்திலான நிலைமைகளுக்கு இசைவாக்கமடைந்து உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களுக்குள்ளாகி ஒருநாள் அவர்கள் புதிய இனமாக கூர்ப்படையலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மனிதர்கள் செவ்வாய்க்கிரகத்தை சென்றடையும் போது அங்குள்ள முற்றிலும் வித்தியாசமான காலநிலை காரணமாக அதிவேகமான கூர்ப்பு நிலை மாற்றங்களுக்குள்ளாகி புதிய இனமாக மாற்றமடையலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் மேற்படி ஆய்வில் பங்கேற்ற போலந்தில் ரஸெஸ்ஸோவ் எனும் இடத்திலுள்ள தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான கொன்ராட் ஸொசிக் விபரிக்கையில்,
செவ்வாய்க்கிரகத்துக்குச் செல்லும் விண்வெளிவீரர்கள் தமது பயணத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள அவர்களுக்கு உணர்வுநிலையை விரிவுபடுத்த இலத்திரனியல் உபகரணங்களும் சோர்வான நிலைமையை போக்க மருந்துகளும் ஏனைய உணர்வு ரீதியான வசதிகளும் தேவைப்படலாம் எனத் தெரிவித்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் தொடர்ந்து தங்கியிருக்கும் பட்சத்தில் அவர்கள் புதிய இனமாக கூர்ப்படைவது தவிர்க்க முடியாது என இந்த ஆய்வில் பங்கேற்ற கூர்ப்பு தொடர்பான உயிரியல் நிபுணரான கலாநிதி ஸ்கொட் சோலோமான் கூறுகிறார்.
Related posts:
|
|