E.P.D.P பாவித்த வீடோன்றில் 13 மனித உடலங்களும் 53  ரி – 56  ரக துப்பாக்கிகளும்  பதுக்கிவைப்பு?

Friday, October 27th, 2017

தீவகத்தின் ஊர்காவற்றுறை பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவரது குடும்பம் வாழ்ந்து வந்த வீடொன்றில் இறந்த மனித உடலங்களும் ஆயுதங்களும் இருப்பதாக அதிரடிப்படையினருக்கு இனந்தெரியாதவர்கள் வழங்கிய தகவலை அடுத்து அதிரடிப்படையினர் குறித்த வீட்டை சோதனையிட்டபோது வெறும் தகர டப்பா ஒன்று மட்டுமே அங்கிருந்து மீட்டு ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறை கரம்பொன் மேற்கு பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவரது குடும்பம் நீண்டகாலமாக வழ்ந்துவந்த வீட்டை இன்றையதினம் திடீரென அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து அவ்வீட்டின் அறை ஒன்றை இயந்திரங்கள் கொண்டு தோண்டி தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விட்டில் 13 மனித உடலங்களும் T – 56  ரக துப்பாக்கிகள் 53 இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதால் அவ்வீட்டை பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

பெரும் எடுப்பில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தேடுதலின்போது அந்த வீட்டிலிருந்து வெறும் தகர பெட்டி ஒன்று மட்டுமே அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. அதிரடிப்படையினரது  இந்த தேடுதலால் குறித்த வீடு பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

எந்தவொரு தடயங்களும் சிக்காத நிலையில் குறித்த விட்டை சோதனையிட்ட அதிரடிப்படையினர் சேதங்களுக்குள்ளான வீட்டை தாமே மீளவும் புனரமைத்து தருவதாக தெரிவித்துள்ளதுடன் அந்த வீட்டை உடனடியாகவே புனரமைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே கடந்த காலங்களிலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மீது அபாண்டமான பழிகளை பலர் தமது சுயநலன்களுக்காக சுமத்தியிருந்ததுடன் தீவக கிணறுகளை தோணடிப்பார்த்தால் அங்கு ஆயுதங்களும் மனித எச்சங்களும் இருக்கும் என்றும் தகவல்களை வெளியிட்டு அதிரடிப்படையினருக்கு ஏவிவிட்டு ஏமற்றமடைந்திருந்த நிலையில் இன்றையதினமும் விஷமிகளால் தவறான தகவல் அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை கேட்டு தேடுதலில் இறங்கிய அதிரடிப்படையினருக்கு எந்தவொரு தடயமும் கிடைக்காமையால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும்  தகவல் வழங்கிய தரப்பினர் மீது மிகக் கடுப்பாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: