9 மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு!
Tuesday, August 30th, 2016
ஒன்பது பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும், இந்த விசாரணை அறிக்கைகளை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஒழுங்குப்படுத்தப்பட்ட 3 விசாரணை அறிக்கைகளானது ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. மேலும் பாரிய மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 1500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது
Related posts:
டெங்கு நோய்: 2 ஆயிரத்து 272 பேர் பாதிப்பு - சுகாதார அமைச்சு!
தொழில் வாய்ப்பை இழந்துள்ள 10,000 இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்...
ரஷ்ய தூதுவர் - பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு - இராணுவ இராஜதந்திர விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்!
|
|