இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால் பாதுகாப்பு வழங்க 24 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் – கடற்படை தெரிவிப்பு!

Tuesday, November 9th, 2021

நாட்டில் சீரற்ற காலநிலையினால் இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால் அதிலிருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக கடற்படையின் 24 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திற்கு மூன்று நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

வெலிசர மற்றும் கொழும்பு கடற்படை முகாம்களில் இருந்து 24 இலங்கை கடற்படையின் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும், காலி கடற்படை முகாமில் இருந்து ஆறு நிவாரணக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: