84 கோடி ரூபா செலவில் ஹம்பாந்தோட்டையில் யானைகள் சரணாலயம்!
Friday, April 5th, 2019ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹர தேசிய வனாந்தரத்தில் யானைகள் சரணாலயத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
84 கோடி ரூபா செலவில் சுமார் 3000 ஹெக்டயர் நிலப்பரப்பில் குறித்த சரணாலயம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மாகாணத்திலும், ஊவா மாகாணத்திலும் குழப்பம் விளைவிக்கும் யானைகளைப் பிடித்து சரணாலயத்தில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், சரணாயலத்தைச் சுற்றி 30 கிலோ மீற்றர் சுற்றளவிலான யானை வேலி அமைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
இம்மாதம் ஜனாதிபதி ரஷ்யாவிற்கு விஜயம் !
மூன்று கட்டளைச் சட்டமூலங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிப்பு!
புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில் திருப்தி இல்லை – ஜனாதிபதி...
|
|