கொரோனா முடக்க நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டது புங்குடுதீவு – எனினும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் என அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!

Tuesday, October 20th, 2020

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி கடந்த மூன்று வாரங்களாக தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் புங்குடுதீவு பகுதியானது இன்று காலையிலிருந்து முடக்க நிலையிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் இன்றிலிருந்து புங்குடுதீவு பிரதேசம் வழமைக்குத் திரும்பும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் அப்பகுதி மக்களும், அப்பகுதிக்கு சென்றுவரும் பொது மக்களும் சுகாதார நடைமுறையினை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் குறித்த பகுதியியானது சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: