வழித்தட அனுமதியின்றி பஸ் சேவை: சாரதிக்கு இருபது ஆயிரம் ரூபா அபராதம்!

Thursday, December 1st, 2016

வழித்தட அனுமதியின்றி கொழும்பு – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தின் சாரதிக்கு 20ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்டபோதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி யாழ்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற தனியார் பயணிகள் பேருந்தினை சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸார் நுணாவில் பகுதியில் வைத்து சோதனை மேற்கொண்ட வேளை வழித்தட அனுமதியின்றி பயணிகளை ஏற்றி சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பேருந்தினை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பதுடன் பயணிகளை வேறு ஒரு பேருந்தில் ஏற்றி அனுப்பினர். மேற்படி பேருந்தின் சாரதிக்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரம் மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அபராதம் விதிக்கப்பட்டது.

courtf2ffd1

Related posts: