8 இலங்கை கப்பல் பணியாளர்கள் ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகளால் கைது!

Saturday, August 20th, 2016

சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மூன்றாம் தரப்பொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சிய கடல் பாதுகாப்பு பிரிவினரால் இலங்கை கப்பல் பணியாளர்கள் 8 பேர் கைதுசெய்துள்ளதுடன், அவர்களின் கப்பலையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை பணியாளர்களைக் கொண்ட அல் கலீதியா என்ற கப்பல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஃபுஃபேரா பிராந்தியத்தை அண்மித்த கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தினால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கப்பல் பணியாளர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக இலங்கையின் கொன்சியூலர் அலுவலகம் குறிப்பிட்டது.

Related posts: