6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Saturday, January 6th, 2024

இன்றுமுதல் 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தட்டம்மை நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ள 9 மாவட்டங்களை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,

இந்த நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

தொற்று நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று, 6 முதல் 9 மாதங்களுக்கு இடையிலான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு பெற்றோருக்கு சுகாதார மேம்பாட்டு பணியகம் ,எழும் தெரிவித்துள்ளது.

Related posts: