5 ஆம் திகதிமுதல் மீண்டும் விலை குறைக்கப்படுகின்றது லிட்ரோ எரிவாயு – எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!
Sunday, October 30th, 2022நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதிமுதல் மீண்டும் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றுக் காலை மற்றுமொரு எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்த நிலையில் 3,700 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கும் பணி ஆரம்பமாகும்.
இதேவேளை உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் தற்போது குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் பயனை மக்களுக்கு வழங்கும் நோக்கில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தொடரும் மழை: நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு - சந்தோசப்படும் யாழ் நகர வர்த்தகர்கள்!
யாழ்ப்பாணத்தை மீண்டும் அச்சுறுத்துகின்றது கொரோனா ; அச்சமடையத் தேவையில்லை என்கிறார் மருத்துவ அதிகாரி ...
நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக வரிக் கொள்கையில் மாற்றம் - அமைச்சர் உதய கம்மன்பில !
|
|