4,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை!

Thursday, July 29th, 2021

நான்காயிரம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கிடையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் காணி உறுதிப்பத்திரம் அற்றவர்களுக்கு, உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் நிலந்த விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

காணி உறுதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக பணத்தை செலுத்தியும் இதுவரை உறுதிப்படுத்திரம் பெற்றுக் கொள்ளாதவர்கள், தமது மாவட்ட செயலகத்திற்கு சென்று தேவையான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

Related posts: