வருகிறது விபத்துக்களின் போது உயிரிழப்போரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதற்கு திட்டம் – வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர்!

Sunday, January 28th, 2018

திடீர் விபத்துக்களின் போது, உயிரிழப்போரின் குடும்ப உறுப்பினர்களுக்காக நாடு முழுவதிலும் ஆய்வுகளை மேற்கொண்டு, புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக  வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.

திடீர் விபத்துக்களில் உயிரிழப்போர் பெரும்பாலும், குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பத் தலைவர்களாவர். இவர்களது மறைவு காரணமாக, அக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்வி, பொருளாதாரம், பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு, உதவும் பொருட்டு, நாழுதழுவிய ரீதியில் ஆய்வுகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில், புதிய திட்டம் வகுக்கப்பட உள்ளது என்று வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட கூறினார்.

Related posts: