திருமண வைபவங்கள் தொடர்பில் வௌியான புதிய சுகாதார நடைமுறை!

Friday, August 6th, 2021

500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மரண வீடொன்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: