பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார செயலாளருடன் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடல்!
Wednesday, March 16th, 2022நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றையதினம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கு பயணமானார்.
இந்நிலையில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஸ் வர்தன் ஷ்ரிங்லாவுடன் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின்போது இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இலங்கை திறைசேரி செயலாளர் எஸ் ஆர். ஆட்டிகல ஆகியோரும் உடன் இருந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான நிதி உதவிகள் சம்பந்தமாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
000
Related posts:
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நடவடிக்கை!
டிஜிட்டல் முறைமைக்கமையானது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் - சேவையை பெற நாள் மற்றும் நேரத்தை...
|
|