இன்றுமுதல் புதிய திட்டத்துடன் கீழ் விசேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பம் – பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவிப்பு!

Thursday, July 4th, 2024

இன்று முதல் புதிய திட்டத்துடன் விசேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைக்கு இலங்கை இராணுவத்தினரின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கொழும்பை சுற்றியுள்ள பல பிரதேசங்களில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

000

Related posts: