40 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி!
Wednesday, November 16th, 2016
40 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு ஒரே முறையில் காப்புறுதியை வழங்க நடவடிக்கை மேற்கொண்ட முதலாவது நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பெறும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
திஸ்மமஹராம பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர உரையாற்றினார். அமைச்சர் இங்கு உரையாற்றுகையில்: ‘ பாடசாலை மாணவர்கள் விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் இழப்பீட்டை வழங்கும். இதற்கான காப்புறுதி முன்மொழிவு இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.இது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். மக்கள நலனை முன்னிலைப்படுத்திய வரவு செலவுத்திட்டமே சமர்ப்பிக்கப்படடுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Related posts:
அதிகாரம் உள்ளதென்பதால் நடத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய
முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் - ஜனாதிபதியிடம் அமைச்சர் ...
டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு - இதுவரையான காலப்பகுதியில் 23,731 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்...
|
|
|


