4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் அபகரிப்பு!
Monday, September 19th, 2016
புறக்கோட்டையில் உள்ள தங்க ஆபரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை மிகவும் சூட்சுமமான முறையில் அபகரித்து செல்லப்பட்ட சம்பவமொன்று புறக்கோட்டையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிவிவகார அமைச்சின் பரிசோதகர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொண்ட நால்வரை, அங்கு வேலைச்செய்தவர்களின் கைகளுக்கு போலியான முறையில் கைவிலங்கிட்டு, தங்கத்தை அபகரித்து சென்றுள்ளனர்.
அவ்வாறு அபகரித்தவர்கள் தொடர்பில் மிகவும் முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதுமட்டுமன்றி அவர்களிடமிருந்து சுமார் ஒரு இலட்சம் ரூபாயையும், கடவுச்சீட்டுகளையும் அக்குழுவினர் அபகரித்துச்சென்றுள்ளனர். இந்தத் தங்க நகை ஆபரண பட்டறையில் வேலைச்செய்வோரில் பலர், இந்தியப் பிரஜைகள் என்று அறியமுடிகின்றது.

Related posts:
இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு - கொழும்பை சேர்ந்த மேலும் இருவர் இன்றும் பல...
இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் - பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர...
யுத்த நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ரஷ்ய அதிபர் புடின் பேச்சு!
|
|
|
விரிவான பொருளாதார வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் வருடமாக அடுத்த ஆண்டு பிரகடனம் - நிதியமைச்சர் ரவி!
புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை பாரா...
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் விரைவில் புதிய சட்டமூலம் - தேர்தலில் விரல்களுக்கு மை பூசும் முறைம...


