30, 000 அரச பணியாளர்கள் ஓய்வு – மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Thursday, December 29th, 2022

நாளை மறுதினம் 30,000 க்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில், ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதிகளவானனோர் ஒரே தடவையில் ஓய்வுபெறவுள்ள நிலையில், அரச சேவையில் வீழ்ச்சி ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய அரசாங்கம் அதனை 60 ஆக குறைத்துள்ளது.

இந்த நிலையில் இதில் 2021 ஆம் ஆண்டு அரச சேவையில் இருந்து ஓய்வு பெறுபவர்களையும் உள்ளடக்கி வரலாற்றில் முதல் தடவையாக பெருமளவானோர் நாளை மறுதினம் ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: